“டூப் போடுவதா.. முடியவே முடியாது” –இயக்குனரிடம் சீறிய அனுஷ்கா..!

ஒரே நேரத்தில் பல பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் திறமை தனக்கு இருக்கிறது என்பதை பலமுறை நிரூபித்துள்ளார் அனுஷ்கா.. இப்போதும் கூட ரஜினியுடன் ‘லிங்கா’, அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதேசமயம் தெலுங்கில் ஒரே நேரத்தில் இரண்டு சரித்திரப்படங்களில் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் குணசேகர் இயக்கிவரும் ‘ராணி ருத்ரமாதேவி’ படத்தின் சண்டைக்காட்சிகள் நாற்பது நாட்களாக படமாக்கப்பட்டன.

முப்பதாவது நாள் படப்பிடிப்பின்போது சண்டைக்காட்சியில் நடித்த அனுஷ்காவுக்கு வலதுகை மணிக்கட்டில் சிறிய அளவில் மயிரிழையிலான காயம் ஏற்பட்டது. காயத்தை பரிசோதித்த மருத்தவர்கள் அனுஷ்காவை ஓய்வு எடுக்கும்படி சொல்லியிருக்கிரார்கள்.

இயக்குனர் குணசேகரும் சண்டைக்காட்சிகளில் டூப் போட்டு எடுத்துக்கொள்ளலாம் என சொன்னாராம். ஆனால் அனுஷ்காவோ ‘டூப்’பெல்லாம் போடக்கூடாது.. நானே நடித்துவிடுகிறேன் என கறாராக கூறியதோடு மீதி நாட்களில் படப்பிடிப்புடன் உற்சாகத்துடன் கலந்துகொண்டாராம்.