விஜய்சேதுபதி சந்தித்த நாகர்கோவில் சவால்..!

வித்தியாசமான கதைகளாக பார்த்துப்பார்த்து தேர்வு செய்தாலும் கூட கைநிறைய கதைகளாக சேர்ந்துவிட்டது விஜய்சேதுபதிக்கு. தற்போது ஆரஞ்சு மிட்டாய், புறம்போக்கு, மெல்லிசை, இடம் பொருள் ஏவல், வன்மம் என இவர் நடித்துவரும் படங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதமான கதைக்களம் தான்.

அந்த வகையில் கிராமத்து நட்பையும் உறவையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராக இருக்கும் ‘வன்மம்’ படம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய சவாலை தந்ததாம்.. அதாவது படத்தில் இவருக்கு சிரமம் தந்த ஒரே விஷயம் நாகர்கோவில் பாஷை தான். மதுரை அல்லது சென்னை பாஷையைப்போல டக்கென்று மாற்றிப்பேசி விடமுடியாது.

ஆனாலும் இயக்குனர் ஜெயகிருஷ்ணா உதவியுடன் பாஷை பிரச்சனையை அழகாக சமாளித்து நாகர்கோவில்காரராகவே வெளுத்துக்கட்டியுள்ளாராம் விஜய்சேதுபதி. இந்தப்படத்தில் இவரின் நண்பனாக ‘கழுகு’ கிருஷ்ணா நடிக்க, கதாநாயகியாக சுனைனா நடிக்கிறார்.