“மகளுக்கு பெயர் சூட்டியதில் சர்ச்சை வேண்டாமே” – பிருத்விராஜ்

மலையாள ஹீரோக்களில் அதிகமான இளம் ரசிகைகளை கொண்ட பிருத்விராஜ், தன்னை துரத்தி துரத்தி காதலித்தவர்களை ஒதுக்கி தள்ளிவைத்துவிட்டு, டிவி தொகுப்பாளரான சுப்ரியாவை காதலித்து 2011ல் கரம் பிடித்தார். இதோ இப்போது மூன்று வருட சந்தோஷ தாம்பத்யம் கழிந்த நிலையில் முதன்முறையாக ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாகி சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருக்கிறார்.

தற்போது தனது மகளுக்கு அலங்ரிதா மேனன் என பெயரிட்டுள்ளார். இதை தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர் குறிப்பிட்டதும் வாழ்த்துக்கள் வந்த அதே அளவுக்கு, மேனன் என ஜாதிப்பெயரை சூட்டியதற்காக நிறைய விமர்சனங்களும் எழாமல் இல்லை.

ஆனால் பிருத்விராஜோ தனக்கு எப்போதுமே ஜாதியில் உடன்பாடில்லை என்றும் மேனன் என்பதை, தான் ஒரு பெயராக மட்டுமே பார்ப்பதாகவும், அதனால் இது குறித்த சர்ச்சை எதுவும் வேண்டாமே என விளக்கம் அளித்துள்ளார்.