புலியை பிடிக்க உதவிய சூர்யாவின் ‘சிங்கம்’…!

மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ‘டமார் படார்’. இந்தப்படத்தில் பிருத்விராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஆனால் மேலே சொன்ன டைட்டிலுக்கும் நாம் சொல்லப்போகும் விஷயத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை. விஷயம் படத்தில் இன்னொரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்த பாபுராஜை பற்றித்தான்.

படத்தில் சர்க்கஸ் வித்தை காட்டுபவராக நடித்திருந்த இவர் ஒரு கிராமத்தின் வழியாக வரும் இவர் அங்கே புலி ஒன்று பக்கத்தில் உள்ள காட்டுக்குள் உலாவுவதாக கேள்விப்படுவார்.. மக்கள் எல்லாம் அஞ்சி நடுங்க, இவர் காட்டுக்குள் போவதாக சொல்லி கிளம்புவார்.

அதற்கு முன்னேற்பாடாக அங்கே அருகில் ஒட்டப்பட்டிருக்கும் சூர்யா நடித்த சிங்கம் படத்தின் போஸ்டரில் உள்ள அவரது முகத்தை மட்டும் வெட்டி ஒரு முகமூடி போல பின்னந்தலையில் மாட்டிக்கொள்வார். காரணம் இரு பக்கமும் மனித முகத்தை பார்க்கும் புலி குழப்பத்தில் மிரண்டு விடுமாம்.

ஆனால் அதற்கப்புறம் அவர் காட்டிற்குள் போக, புலி ஒரு மரத்தின் மீதிருந்து இவரை நோக்கி பாயும்போது தடுக்கி விழுந்து இறந்துவிடுவதும், பாபுராஜ் தானே புலியை கொன்றதாக பந்தாவாக அதை தோளில் தொக்கி போட்டுக்கொண்டு வருவதும் தனிக்கதை.