கமலை தொடர்ந்து திலீப் ; ஜார்ஜ் குட்டியை தொடர்ந்து ஜோஸ்குட்டி..!

பொத்தாம் பொதுவாக இப்படிச்சொன்னால் எப்படி செய்தியை கிரகித்துக்கொள்வது என குழம்பவேண்டாம்.. ‘த்ரிஷ்யம்’ மூலமாக மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர் வரிசையில் சேர்ந்துவிட்ட இயக்குனர் ஜீத்து ஜோசப், தற்போது தமிழில் அதன் ரீமேக்கான பாபநாசம்’ படத்தை விறுவிறுப்பாக இயக்கிவருகிறார்.

இதை முடித்தவுடன் தமிழுக்கு மரியாதையாக ஒரு வணக்கம் சொல்லிவிட்டு மீண்டும் மலையாளத்துக்கே செல்கிறார் ஜீத்து ஜோசப். அவரது அடுத்த படத்தின் கதாநாயகன் திலீப் தான். படத்தின் பெயர் ‘லைப் ஆப் ஜோஸ்குட்டி’. த்ரிஷ்யத்தில் மோகன்லாலை வைத்து ஜார்ஜ் குட்டியின் கதையை சொன்னவர் இந்தப்படத்தில் இன்னொரு ஜோஸ்குட்டியின் கதையை சொல்லி மிரட்டுவார் என எதிர்பார்க்கலாம்.