‘உப்புமா கம்பெனி’ ஆரம்பிக்கிறார் பார்த்திபன்…!

ஒரு பீனிக்ஸ் பறவையைப்போல மீண்டும் உயிர்த்தெழுந்து வந்திருக்கிறார் பார்த்திபன் என்று சொன்னால் அதுதான் பொருத்தமாக இருக்கும். ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் வெற்றி தினந்தோறும் அவருக்கு பாராட்டுக்களை குவித்துக்கொண்டிருக்கிறது.

இதனால் தனது அடுத்த படத்தை இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்க முடிவுசெய்துவிட்டார் பார்த்திபன. “படத்தோட பெயர் ‘உப்புமா கம்பெனி’. இப்போதைக்கு தலைப்பு மட்டும் முடிவாகி இருக்கிறது. இன்னும் கதை எதுவுமே நான் தீர்மானிக்கவில்லை” என்கிறார் பார்த்திபன். சரி அவருக்கு எதுக்கு கதை..? அவர்தான் கதையே இல்லாம படம் எடுக்கறவர் ஆச்சே..?