அரிமா நம்பியை பாராட்டினார் விஜய்..!

வெள்ளியன்று வெளியான விக்ரம் பிரபு நடித்த ‘அரிமா நம்பி’ படம் அதன் மாலைக்காட்சிகளில் இருந்தே மவுத் டாக்கினால் பிரபலமாகி விட்டது. நேற்று பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் போர்டுதான் தொங்கவிடப்பட்டிருந்தது. ஏ.ஆர்.முருகதாஸின் சிஷ்யரான ஆனந்த் ஷங்கர் படத்தை விறுவிறுப்பாக இயக்கியிருந்தார்.

‘கத்தி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விஜய் தனது பிசியான ஷெட்யூலிலும் இந்தப்படத்தை பார்த்து விட்டு படத்தின் இயக்குனரை பாராட்டியுள்ளார்.. இந்த தகவலை ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கி படத்தில் இணை இயக்குனராக் ஆனந்த் ஷங்கர் பணியாற்றியபோதே தனது திறமையால் விஜய்யை கவர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.