தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஓவியர் ஸ்ரீதர்..!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ஒவியங்களை பலரும் எதிர்பாரா வண்ணம் பிரம்மிக்கும்படியாக வரைந்து அவரின் பாரட்டையும் பெற்றவர் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.. இயற்கையையும், இயல்பான மனித அழகையும் ஒவிய வடிவில் வரைபவரான ஒவியரான. ஸ்ரீதர், பல ஒவிய கண்காட்சிகளையும் நடத்தியுள்ளார்..

அதுமட்டுமல்ல, இவர் இப்போது ஜெ என்பவர் இயக்கும் ‘ஆந்திரா மெஸ்’ என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.. கலையின் மீதும் கலைஞர்கள் மீதும் கொண்ட பாசத்தினால் தற்போது “ஸ்கெட்ச்புக் புரொடக்ஷன்ஸ்” எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் துவக்கி வைத்தார்.

தற்போது ‘ஆந்திரா மெஸ்’ படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஜெய் தான் இந்த கம்பனி தயாரிக்கும் முதல் படத்தை இயக்கவுள்ளார். படத்திற்கான் ஆரம்பகட்ட வேலைகள் துவங்கப்பட்டுவிட்டது. படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் சென்னையில் ஆரம்பிக்கவுள்ளது.

தனது நிறுவனத்தின் மூலம் வருங்காலத்தில் தரமான பல படைப்புகளையும் பல புதிய இயக்குனர்களையும் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்த போவதாகவும் தயாரிப்பாளர் ஏ.பி.ஸ்ரீதர் கூறியுள்ளார்.