“நான் புறா இல்ல.. கழுகுடா..” அஞ்சான் சூர்யா பஞ்ச்..!

லிங்குசாமி டைரக்ஷனில் சூர்யா நடித்துள்ள ‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் இசைவெளியீட்டை வரும் ஜூலை-18ல் நடத்த இருக்கிறார்கள். படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் பண்ணவும் திட்டமாம். படம் மும்பையில் நடப்பது போன்ற ஆக்ஷன் கதையை பின்னணியாக கொண்டது.

ஆக்ஷன் படம் என்றால் பஞ்ச் டயலாக் இல்லாமலா..? சொல்லப்போனால் ‘சிங்கம்’ படத்தில் சூர்யா பேசிய “ஓங்கி அடிச்ச ஒன்னரை டன் வெயிட்டுடா”வை இன்றும் கூட யாராவது எங்கேயாவது பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதேமாதிரி இந்தப்படத்திலும் “பட்டாசு சத்தம் கேட்டு பயந்து போறதுக்கு நான் ஒன்னும் புறா இல்லடா.. காத்திருந்து இரையை கவ்வுற கழுகுடா..” என்கிற பஞ்ச் டயலாக்கும் இருக்கிறதாம்.. பஞ்ச் வைப்பதில் லிங்குசாமியும் சளைத்தவரா என்ன..?