மலையாள உலகில் இருந்து ஒரு தமிழ்ப்படம்..!

மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘மிழிகள் சாட்சி’, சுரேஷ்கோபி நடித்த ‘வெண்சங்குபோல்’ உட்பட நான்கு படங்களை இயக்கியவர் அசோக் ஆர்.நாத். இவர் சிறந்த படத்திற்கான தேசிய விருதும் பெற்றவர். இவர் இப்போது தனது ஐந்தாவது படத்தை தமிழ், மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் இயக்கியுள்ளார்.

தமிழில் இதற்கு ‘திருந்துடா காதல் திருடா’ என பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை சென்னையிலேயே நடத்தியுள்ளார்கள். இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சேரன் இசைக்குறுந்தகட்டை வெளியிட்டார்.

புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக மலையாள நடிகர் முகேஷ் நடிக்க, இன்னொரு முக்கிய காமெடி நடிகரான கொச்சு பிரேமனும் நடித்திருக்கிறார். இந்தப்படத்தை ஹரிகுமார் மற்றும் சணல் தோட்டம் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் சணல் தோட்டம்(பெயர் தாங்க) இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார்.