ஓய்வெடுக்க போகிறாராம் சமந்தா…!

தலைப்பை படித்துவிட்டு சமந்தாவின் ரசிகர்கள் குய்யோ முறையோ என கத்தி கலாட்டாவெல்லாம் பண்ண வேண்டாம்.. கண்ணீரும் வடிக்க வேண்டாம். சமந்தா ஓய்வெடுக்க விரும்புவது ஜஸ்ட் ஒரு மாசத்திற்கு மட்டும் தான்..

தற்போது தெலுங்கில் ஒரு படம், தமிழில் ‘அஞ்சான்’, ‘ஐ’ ஆகிய படங்களில் தன்னுடைய போர்ஷனை நடித்து முடித்துவிட்டார் சமந்தா. இருந்தாலும் விஜய்யுடன் நடிக்கும் ‘கத்தி’, ஜூனியர் என்.டி.ஆருடன் நடிக்கும் ‘ரபாஷா’ மற்றும் விஜய் மில்டன் டைரக்ஷனில் விக்ரமுடன் ஒரு படம் என தொடர்ந்து பிசியாகவே நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதனால் சமந்தாவின் மனதும் உடலும் ஓய்வுக்கு ஏங்குகிறதாம். ஒரு மாதமாவது சினிமாவை விட்டு ஒதுங்கி ஓய்வு எடுக்கவேண்டும் என்று விரும்புவதாகவும் ஆனால் ஓய்வுதான் எப்போது கிடைக்கும் என தெரியவில்லை என்றும் சோகத்துடன் தனது சமூக வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் சமந்தா..