“எச்சில் இலையில் சாப்பிட அலையாதீர்கள்”- ‘தொட்டால் தொடரும்’ விழாவில் கேயார் காட்டம்..!

படத்தை விமர்சனம் பண்ணும்போதெல்லாம் “உங்களுக்கென்ன ஈஸியா விமர்சனம் பண்ணிட்டு போயிடுவீங்க.. படத்தை டைரக்ட் செஞ்சு பார்த்தா தானே அந்த கஷ்டம் தெரியும்”னு பல டைரக்டர்கள் புலம்பி பார்த்திருப்பீங்க.. அந்த அளவுக்கு விமர்சனம்ங்கிற தமிழ்சினிமாவுல விமர்சகரா வலம் வர்ற ஒரு வசிஷ்ட முனிவர்தான் இணையதள விமர்சகரான நம்ம கேபிள் சங்கர்.

ஒவ்வொரு படத்தையும் அக்குவேறா, ஆணிவேறா பிரிச்சு மேய்ஞ்சுடுவாரு. இப்ப அவரே ஒரு படத்தை டைரக்ட் பண்ணி முடிச்சிட்டாரு. படத்தோட பேரு ‘தொட்டால் தொடரும்’. இந்தப்படத்தில் தமன், அருந்ததி இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். பி.சி.சிவன் என்பவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், கேயார், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், நடிகை மதுமிதா உட்பட திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Keyar
இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பேசியபோது அனல் பறந்தது.. வழக்கம்போல விழாக்களுக்கு டிமிக்கி கொடுக்கும் முன்னணி நடிகைகளையும் முன்னணி நடிகர்களின் பின்னால் அலையும் தயாரிப்பாளர்களையும் சாடிய அவர், “ஜெயித்த நடிகர்களின் கால்ஷீட்டுக்காக அவர்களின் பின்னால் அலைபவர்கள், ஏற்கனவே சாப்பிட்டவர்களின் எச்சில் இலையில் அமர்ந்து சாப்பிடுபவர்களுக்கு சமம்.. தயவு செய்து புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்” என விளாசித்தள்ளினார் கேயார்.

க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்தப்படத்தை துவார் சந்திரசேகர் தயாரித்துள்ளார். இது இவர் தயாரிக்கும் ஐந்தாவது படம்..கேபிள் சங்கர் படம் வரட்டும்.. அதையும் பார்த்துடுவோம் என பல சினிமா
இயக்குனர்களும் அவர்களுடன் சக பத்திரிகையாளர்களும் கூட ஆவலாக காத்திருக்கிறார்கள்.