தயாரிப்பில் இறங்கினார் சூர்யா.. புதியவர்களுக்கு வாய்ப்பளித்திருக்கலாமே..?

நடிகர்கள் தயாரிப்பாளர்களாக மாறும் வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பவர் சூர்யா. ஏற்கனவே குடும்ப நிறுவனமாக ஸ்டுடியோகிரீன் நிறுவனம் இருந்தாலும் அது பெரும்பாலும் கார்த்தியை வைத்தே படங்கள் தயாரிப்பதால் தனக்கென ஒரு தயாரிப்பு நிறுவனம் இருந்தால் நல்லதென நினைக்கிறார் சூர்யா. அதன் வெளிப்பாடுதான் அவர் புதிதாக ஆரம்பித்திருக்கிருக்கும் “2-D எண்டர்டைன்மெண்ட்” நிறுவனம்.

இதுகூட சூர்யா நடிக்கும் படங்களை தயாரிப்பதற்காக அல்ல. சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை தயாரிக்கத்தான். அந்தவகையில் சூர்யாவின் முதல் தயாரிப்பை இயக்குகிறார் டைரக்டர் பாண்டிராஜ். படத்தின் இணை தயாரிப்பாளரும் அவரது பசங்க புரொடக்ஷன்ஸ் தான்.

பிந்துமாதவி இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். முன்னேற வழிதேடிக்கொண்டிருக்கும் திறமையுள்ள புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் புதியவர்களை கைதூக்கிவிட்ட புண்ணியம் சூர்யாவுக்கு கிடைக்குமே.. பாண்டிராஜூக்கு வேறு யாரிடமும் படமா கிடைக்காது என திரையுலகத்திலேயே சிலர் முணுமுணுக்கின்றனர்.
1

3