மகாபாரத கேரக்டரில் விஜய் வசந்த் நடிக்கும் ‘சிகண்டி’..!

இதிகாசங்களில் இருந்து முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களை நவீன சமூகத்தில் உலாவும் மனிதர்களாக மாற்றி சினிமா எடுப்பது தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே தளபதியில் கர்ணன், துரியோதனன், அர்ஜுனன் என முக்கிய இதிகாச கதாபாத்திரங்களை நம் கண் முன் உலாவவிட்டிருந்தார் மணிரத்னம்.

அந்தவகையில் ‘சிகண்டி’ என்ற படமும் புராதான கதாபாத்திரங்களான சிகண்டி மற்றும் அர்ஜூனன் ஆகியோரை சமூக கதாபாத்திரங்களாக சித்தரித்து உருவாக தயாராக இருக்கிறது. ‘என்னமோ நடக்குது’ வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜபாண்டி, விஜய் வசந்த் கூட்டணியில் மீண்டும் உருவாகும் படம் தான் இந்த ‘சிகண்டி’.

படத்தின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைத்தான் இந்த ‘சிகண்டி’ மற்றும் ‘அர்ஜுனன்’ கேரக்டர்கள் பிரதிபலிக்கின்றன. இதில் விஜய்வசந்த் யார் என்பது சஸ்பென்ஸ். படத்தின் ஸ்கிரிப்ட் பணி முடிவடைந்துவிட்டதாம். இன்னும் ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிகர்கள் கிடைத்துவிட்டால் ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்திருகிறார்களாம்.