ரஜினி படம்னாலே அவரோட ரசிகர்கள் எதிர்பார்த்து வர்றது அவர் பேசுற பஞ்ச் டயலாக்கைத்தான். அனிமேஷன் படமாக உருவான கோச்சடையானில் கூட பஞ்ச் டயலாக்குகள் இடம்பிடித்திருந்தன. ஆனால் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் டைரக்ஷனில் ரஜினி நடித்துவரும் ‘லிங்கா’வில் அவர் ‘பஞ்ச்’ எதுவும் பேசப்போவது இல்லை என சிலர் கிளப்பிவிட ரசிகர்கள் ஏமாற்றமான மனநிலைக்கு சென்றிருக்கிறார்கள்.
ஆனால் இதுகுறித்து கே.எஸ்.ரவிகுமார் சொல்லும்போது, “ரஜினி தான் ஒரு படத்தில் பேசிய பஞ்ச் வசனங்களை அடுத்த படத்தில் பேசுவதில்லை. ஆனால் ரசிகர்கள் பயப்படவேண்டாம்.. ‘லிங்கா’விலும் சில பஞ்ச் வசனங்கள் இருக்கின்றன. என்னைப்பொறுத்தவரை ரஜினி டயலாக் பேசினாலே அது பஞ்ச் தான்” என்கிறார். ஆக ரசிகர்கள் இனி நிம்மதியாக இருக்கலாம்.