விமல், சமுத்திரகனி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நீ எல்லாம் நல்லா வருவடா’. சீமான், சமுத்திரகனியிடம் உதவியாளராக இருந்த ஆர்.நாகேந்திரன் இயக்கும் இப்படத்தில் அமிர்தா, பார்பி ஹண்டா நடிக்கிறார்கள். பர்பி ஹண்டா பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை.
ஜீ.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கும், இந்த படத்துக்கு என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதுபற்றி இயக்குனர் ஆர்.நாகேந்திரன் கூறும்போது, “கடந்த 20 வருடங்களாக சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் நடந்த எல்லா விதமான கொலைகளிலும் கூலிப்படையினரின் பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் கூலிப்படை கலாச்சாரம் பெருகி விட்டது.
யாரை கொலை செய்கிறோம், எதற்காக கொலை செய்கிறோம் என்பது தெரியாமல பணம் ஒன்றுதான இவர்கள் குறிக்கோளாக இருகிறது. இந்த கூலிப்படை குறித்த உண்மைகளை பதிவு செய்கிற படம்தான் இது. 40 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. வேகமாக படப்பிடிப்புகள் நடந்து வருகிறது” என்றார்.