1௦௦ நாளை கடந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’

IMG_1303

தற்போது வெளியாகும் புதுப்படங்கள் கூட 1௦௦ காட்சிகளை தாண்டி ஓடுவதில்லை. ஆனால் 49 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படம் மறு வெளியீடு செய்யப்பட்டு 1௦௦ நாட்களை தாண்டி ஓடுகிறது என்றால் அது பெரிய மேஜிக் தான். அந்த மேஜிக்கை நிகழ்த்தி காட்டியவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.. ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வெளியாகி 1௦௦ நாட்களை கடந்து சென்னையில் உள்ள சத்யம் மற்றும் ஆல்பர்ட் தியேட்டர்களில் தினமும் மாலை 6.3௦ மணி காட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது.

1௦௦-வது நாள் விழாவை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடினார்கள். இதற்காக சென்னை ஆல்பர்ட் தியேட்டர் முழுவதும் கட்அவுட், பேனர்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தியேட்டர் முன்பு கூடிய எம்.ஜிஆர் ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது முக்கிய பிரமுகர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதையை செய்யப்பட்டது.