3-வது படத்திலேயே போலிஸ் ஆன ‘அட்டகத்தி’ தினேஷ்

dinesh

எஸ்.பி.பி.சரண் என்றாலே நல்ல, வித்தியாசமான படைப்புகளை வழங்குபவர் என்பது தெரிந்த விஷயம். சென்னை 28, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது ஜே.செல்வகுமாருடன் இணைந்து வழங்கும் படம் ‘திருடன் போலீஸ்’.

பால்ய பருவத்தில் இருந்தே ஓட, விரட்ட என்று பழக்கப்பட்ட கதையை நவீன மயமாக்கி, பல்வேறு கதாபாத்திரங்களின் துணையோடு நகைச்சுவை கலந்த எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்ட ‘திருடன் போலீஸ்’ படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் தருவாயில் உள்ளது.  கம்ப்யூட்டர் தொழில்நுட்ப காட்சிகளில் பிரசித்தி பெற்ற கார்த்திக் இந்த படத்தின் மூலம் இயக்குனராக  அறிமுகமாகிறார்.

‘அட்டகத்தி’ தினேஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு இணையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். ‘அட்டகத்தி’, ‘குக்கூ’ போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் தனக்கு நிலையான பெயரை நிலைநிறுத்திக் கொள்ள மெனக்கெடும் தினேஷுக்கு  ‘திருடன் போலீஸ்’ம் ஒரு மாறுபட்ட படமாக இருக்கும். இந்த படத்தில் தினேஷ் போலீஸ் ஆகா நடித்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

நிதின் சத்யா, பாலசரவணன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜான் விஜய் ஆகிய நால்வரும் இந்த கதையை தாங்கி பிடிக்கும் முக்கிய தூண்கள். மூத்த நடிகர் ராஜேஷ் பொறுப்பில்லாமல் இருக்கும் ஒரு பிள்ளையின் கண்டிப்பான, கண்ணியமான ஒரு தந்தையின் கதாபாத்திரத்தை தனது யதார்த்தமான நடிப்பால் நம் கண் முன் நிறுத்துகிறார். புதிய முயற்சிகளுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில் உருவாகி இருக்கும் ‘திருடன் போலீஸ்’ ஜூலை மாதம் இறுதியில் வெளி வருகிறது.