அதிமுகவில் 1000 பழனிசாமிகள் வருவார்கள்: முதல்வர் பழனிச்சாமி அதிரடி பேச்சு..!

அதிமுகவில் 1000 பழனிசாமிகள் வருவார்கள், ஆட்சி நிலையாக இருக்கும். தினகரனால் ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பிற்கு இன்னும் பல நாட்கள் காத்திருக்க வேண்டும். இதனால் வழக்கு தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த 18 எம்எல்ஏக்களை மீண்டும் கட்சிக்குள் இழுக்க ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு முயன்று வருகிறது.

மயிலாடுதுறையில் நடைபெற்ற ‘காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது அவர் 18 எம்எல்ஏ வழக்கு குறித்து பேசினார்.

18 எம்எல்ஏக்கள் வழக்கு ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று போடப்பட்டது. திமுகவிற்கு பயந்தே சசிகலாவை பொதுச்செயலாளராக்கினோம். ஆனால் அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் சதி செய்தார். திமுக தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறது.

இருவரும் சேர்ந்துதான் ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறார்கள்.தற்போது இருக்கும் ஆட்சி நிலையாக தொடரும் 1000 பழனிசாமிகள் அதிமுகவில் வரமுடியும், ஆட்சி நிலையாக இருக்கும்.

காவிரி உரிமையை மீட்க தமிழகத்தில் 38 ஆண்டு காலம் போராட்டம் நடந்தது.அதிமுக அரசு நடத்திய சட்டப்போராட்டத்தால் மட்டுமே நல்ல தீர்வு கிட்டியுள்ளது, என்றார்.

Leave a Response