துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-வைகோ..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது.
144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல்
துறையினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு
உள்ளிட்டவை நடத்தப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த கந்தையா, ஷண்முகம், மனிராஜ், ஸ்நோலின், வினிதா தாளமுத்து நகரைச்
சேர்ந்த கிளாஸ்டன், ஆண்டனி செல்வராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். தூத்துக்குடி சிப்காட் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்
குமார், ஒட்டாபிடாரத்தை சேர்ந்த தமிழரசன் ஆகியோரும் துப்பாக்கிச்சூட்டில் பலியாகினர். மேலும் படுகாயமடைந்து
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார்த்திக் என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த பலர் மருத்துவமனைகளில்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைதொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும்,
காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ தெரிவித்தார்.

Leave a Response