இஸ்ரேல் பிரதமராக உள்ள பெஞ்சமின் நேதன்யாகு ஆறு நாட்கள் அரசுமுறைப்பயணமாக இன்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். அப்போது இஸ்ரேல் தூதரக அதிகாரிகளும் உடன் இருந்தனர்.இந்த சந்திப்பில் 1700 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு துறைகளில் ஒப்பந்தகள் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது, சமீபத்தில் ஜெருசலேம் விவகாரத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐ.நா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.