நான் ரெடி! அஜித்தும் விஜயும் ரெடியா??

vijay-ajith-mankatha

அஜீத்தும், விஜய்யும் சேர்ந்து 1995ம் ஆண்டு ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்தனர். அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை.

இந்நிலையில் அஜீத்தும், விஜய்யும் சேர்ந்து நடிக்கும் விதத்தில் கதை எழுதி வைத்திருக்கிறேன், இருவரிடமும் கதையை சொல்லி விட்டேன் என்று இயக்குனர் வெங்கட்பிரபு சொன்னதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அஜீத்குமாரும், விஜய்யும் சேர்ந்து நடித்தால் அந்த படத்தை எனது அன்பு பிக்சர்ஸ் மூலம் தயாரிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று திமுக எம்.எல்.ஏ. ஜே.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “அஜீத் மற்றும் விஜய் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வாறு அவர்கள் நடித்தால் அந்த படத்தை தயாரிக்க நான் தயாராக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.