அடுத்தடுத்து சரித்திர படங்களில் நடித்து கொடுக்கும் அனுஷ்கா!!

mfs_a_news

அருந்ததி படத்துக்கு பிறகு அனுஷ்காவை மட்டும் மையப்படுத்தி உருவாகி வரும் படம் ராணி ருத்ரம்மா தேவி. ஆந்திராவை ஆண்ட ராணி ருத்ரம்மா தேவியின் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் கடந்த ஒரு வருடமாக நடித்து வந்தார் அனுஷ்கா. அதற்காக, குதிரையேற்றம், வாள் சண்டை என்று சங்க கால போர்ப்பயிற்சிகள் அனைத்தையும் கற்றுக்கொண்டு ஆவேசமாக சண்டை காட்சிகளில் நடித்து வந்த அனுஷ்கா, கிட்டத்தட்ட படத்தை முடித்து விட்டாராம்.

தற்போது ராஜமவுலி இயக்கும் பாகுபாலி படப்பிடிப்பில் கலந்துகொள்ள தொடங்கியிருக்கிறார் அனுஷ்கா. தமிழில் மகாபலி என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதுவும் சரித்திர கால கதையில் உருவாகும் படம் என்பதால், அனுஷ்காவின் நடிப்பில் ராணி ருத்ரம்மா தேவி பட சாயல் துளியும் தென்படாமல் இருக்க, மாறுபட்ட சண்டை பயிற்சி, மற்றும் நடிப்பு பயிற்சியும் கொடுத்து படமாக்கி வருகிறாராம்.

ராஜமவுலி இயக்கத்திலேயே பிரமாண்ட படமாக உருவாகும் இப்படத்தில் இரண்டு நாட்டு படைகள் மோதிக்கொள்ளும் ஒரு சண்டைக்காட்சியை 2 ஆயிரம் போர் வீரர்களைக் கொண்டு படமாக்குகிறாராம். அதற்கான போர்க்களத்தை பிரமாண்ட செட் அமைத்து தயார்படுத்தியுள்ள அவர், அந்த 2 ஆயிரம் பேருக்கும் கடந்த 6 மாதங்களாக முறையான போர் பயிற்சி கொடுத்து வந்திருக்கிறார்.