இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த பட பட்ஜெட்!

பாகுபலி 2′ படம் வெளிவந்து எட்டு மாதங்களுக்கு ஆன பின்னும் அவர் தன்னுடைய அடுத்த படத்தை ஆரம்பிக்காமல் உள்ளார். வரும் அக்டோபர் மாதம் தான் அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ntr

ராம்சரண் தேஜா, ஜுனியர் என்டிஆர் ஆகியோர் நாயகர்களாக நடிக்க உள்ள அந்தப் படத்திற்காக இயக்குனர், ஹீரோக்கள் சம்பளம் இல்லாமல் சுமார் 90 கோடி வரை ராஜமௌலி பட்ஜெட் கொடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் சேர்த்து தயாரிப்புச் செலவு மட்டும் 300 கோடி என்று செய்திகள் வெளியாகின.

நாயகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர் ஆகியோரது சம்பளத்தையும் சேர்த்தால் படத்தின் பட்ஜெட் 150 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். அதனால், படத்தைத் தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

Leave a Response