காரசாரமான நான்கு சிறுவர்களின் “ஆந்த்ரா மெஸ்”!!

andhra-mess-firstlook1

தலைப்பில் என்ன இருக்கிறது என்ற காலம் போய்  தலைப்பில் தான் எல்லாமே இருக்கிறது என்கிற காலம் இது போலும் . இப்பொழுதெல்லாம் தமிழ்சினிமாவிற்கு வித்தியாசமான தலைப்பை வைக்க ஆரம்பித்துவிட்டனர் இயக்குநர்கள். ரசிகர்களை கவரும் வண்ணம் தலைப்பு  சூட்டி  உள்ள படங்கள் உடனே பிரபலமாக ஆவது  வித்தியாசமான தலைப்புகளை புதிய இயக்குனர்களை யோசிக்க வைக்கிறது.

Show boat ஸ்டூடியோஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் படத்தின் தலைப்பு ‘ஆந்திரா மெஸ்’. சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர் , சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது. அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மனமில்லாமல், யாருக்கும் அடிபணியாமல் வாழ நேரிடும் அவர்களது வாழ்கை பயணமே ‘ஆந்திரா மெஸ்’.

இந்த படத்தின் இயக்குநர் அறிமுக இயக்குநர் ஜெய். ‘ஷைத்தான்’ பட இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். ரேணிகுண்டா ஸ்டைலில் இந்தப் படம் தயாராகியுள்ளது.