“யார் படம் வந்தா என்ன”? என் படம் ஜெயிக்கும் – விஷால் உறுதி!!

vishal4

தோல்வி படங்களை வரிசையாக கொடுத்து, வெற்றி படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நடிகர் விஷால். தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டிய நாடு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட வேலைகள் நடந்து வருகின்றன.

அஜீத்தின் ‘ஆரம்பம்’, கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாகிறது. அதே நாளில் பாண்டிய நாடு படத்தை வெளியிடுவது ஏன் என விஷாலிடம் கேட்டபோது, “பார்க்கவும் வேண்டாம், யோசிக்கவும் வேண்டாம். படம் நன்றாக வந்திருக்கிற தைரியத்தில் தான் வெளியிடுகிறோம்” என்றார்.

மேலும் பேசிய விஷால், “தொடர்ந்து நான் நடிக்கிற படங்கள் தோல்வியடைந்து வந்த நேரம்தான் சசீந்திரனிடம், பாண்டியநாடு கதையைக் கேட்டேன். கதையில் வெற்றி பெறுவதற்கான அனைத்து அம்சங்கள் இருந்தது. அதனால் தான், ஹிட் உறுதி என்று நானே தயாரிப்பாளராகவும் பிள்ளையார் சுழி போட்டேன்.

மேலும், அஜீத், கார்த்தி போன்ற நடிகர்களின் படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வந்தாலும், எனது படமும் வெற்றி பெறும் என்பதை இப்போதே என்னால் அடித்து சொல்ல முடியும். அதனால் யாரைக்கண்டும் எனக்கு பயமில்லை. எனது பாண்டியநாடு வெற்றி பெறப்போவது உறுதி என்றார்.