மகனுக்காக மீண்டும் தயாரிப்பாளராக மாறிய நடிகர் சத்யராஜ்!!

nai

மகன் சிபிராஜை ஹீரோவாக்கி முதன் முதலில் லீ என்ற படத்தைத் தயாரித்தார் நடிகர் சத்யராஜ். நாதாம்பாள் பிலிம் பேக்டரி என்ற பெயரில் இதற்காக சொந்தப் பட நிறுவனம் தொடங்கினார். பிரபு சாலமன் இயக்கிய அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை சிபிராஜுக்கு தரவில்லை. சிபிராஜும் பெரிய நடிகராக ஜொலிக்க முடியவில்லை.

இந்நிலையில், தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் மேலும் ஒரு படத்தை தயாரிக்கிறார் சத்யராஜ். அப்படத்திற்கு ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்று பெயரிட்டிருக்கின்றனர். இப்படத்திலும் சிபிராஜ்தான் நாயகன். இப்படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறதாம்.

இப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். இவர் பிரசன்னா, சிபிராஜ் இணைந்து நடித்த ‘நாணயம்’ படத்தை இயக்கியவர். மீண்டும் இந்த படத்தில் சிபிராஜை இயக்குகிறார். தரண்குமார் இசையமைக்கிறார். நிஷார் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.