தமிழ் நாட்டில் மலையாள படங்களின் “மழை”!!

actress-ananya

ஸ்பெல் பௌன்ட் பிலிம்ஸ் INC என்ற பட நிறுவனம், மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற “காக்டெயில்” என்ற படத்தை தமிழில் தயாரிக்கிறார்கள். வித்தியாசமான படமாக பலராலும் பேசப்பட்டு அமோக வெற்றி பெற்ற “காக்டெயில்” படத்தை தமிழில் வாங்க பலர் போட்டி போட்ட நிலையில் ஸ்பெல் பௌன்ட் INC பட நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டது.

சென்னையில் ஒரு நாள், ஜன்னல் ஓரம், புலிவால், உஸ்தாத் ஹோட்டல், மாலினி 22 பாளையங்கோட்டை போன்ற படங்களை அடுத்து ரீமேக் செய்யப்படும் மலையாள படம் காக்டெயில். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சீனு – நிகேஷ்ராம் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக அனன்யா நடிக்கிறார். முன்னணி நகைச்சுவை நடிகர் ஒருவர் நடிக்கிறார் .

படத்தின் இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் பரதன். இவர் தில், தூள், கில்லி, மதுர மற்றும் தற்போது அஜீத் நடிக்கு வீரம் போன்ற படங்களின் வசனகர்த்தா. அத்துடன் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தின் இயக்குனர். அந்த படத்தை அடுத்து அவர் இயக்கும் அடுத்த படம் இது.

படம் பற்றி அவரிடம் கேட்ட போது, “திரைக்கதைக்கு சவாலான படம் என்பதால் திரைக்கதையை உருவாக்கி கொண்டிருக்கிறோம். சிறப்பான தமிழ் படமாக இது வரும். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைகிறது” என்றார்.