ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி – திரிஷா இணைந்து நடிக்கும் படம் பூலோகம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.
பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி ஒரு குத்துசண்டை வீரராக நடித்துள்ளார். ஹாலிவுட் நடிகர் நாதன் ஜோன்ஸ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்திற்கு ஒரு புதிய பரிணாமம் கொடுப்பதற்காக நடிகர் ஜெயம் ரவி தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு நடித்துள்ளார். படம் முடிவடைந்ததை அடுத்து படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. முன்னதாக செப்டம்பர் இறுதியில் இசையை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.