இனி கல்யாணத்துல எங்க பாட்டுதான் – “வானவராயன் வல்லவராயன்” இயக்குனர் ராஜமோகன்!

DSC_0122

ஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் ஐயப்பன் வழங்க மகாலஷ்மி மூவீஸ் கே.எஸ்.மதுபாலா தயாரிக்கும் படம் “வானவராயன் வல்லவராயன்”. இந்த படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். சந்தானம், சௌகார் ஜானகி, S.P.B.சரண், தம்பி ராமையா, கோவைசரளா, ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணா மற்றும் பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – பழனிகுமார். சினேகன் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராஜமோகன். படம் பற்றி இயக்குனர் ராஜமோகன் கூறும்போது, “அண்ணன் தம்பி பாசம்தான்  கதையோட்டம். அதை காமெடியாக சொல்கிறோம். படம் ஆரம்பம் முதல் கடைசி வரை காமெடி தான்.

திருமண மண்டபங்களில் “மணமகளே மருமகளே வா வா” என்ற பாடல் மட்டுமே ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது .இனி வானவராயன் வல்லவராயன் படத்தில் இடம் பெறும் “வாங்கம்மா வாங்கப்பா வாங்கண்ணே வாங்கத்தே வா மாமா” என்ற உறவுகள் அனைவரையும் கல்யாணத்திற்கு அழைக்கும் பாடலும் கேட்க ஆரம்பிக்கும்.

இந்த பாடல் காட்சி ஒரு திருமண மண்டபத்தில் படமாக்கப்பட்டபோது அலங்காரத்திற்காக தினமும் 50,000 ரூபாய் செலவில் மலர் வாங்கப்பட்டு திருமண மேடை அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. பூ வாங்க மட்டும் 2,50,OOO செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர். நடிகர் கிருஷ்ணா கோவை பாஷையை முறைப்படி பயிற்சி எடுத்து பேசி அசத்தி இருக்கிறார் என்கிறார் இயக்குனர் ராஜமோகன்.