புறம்போக்கு டைட்டில் என்னுடையது – நட்ராஜ்!

Natarajan-Subramanian-cinematographer

புறம்போக்கு டைட்டில் எனக்கு சொந்தமானது. எனவே இயக்குனர் ஜனநாதன் இயக்கம் புது படத்திற்கு வேறு தலைப்பை வைத்து கொள்ள வேண்டும் என்று பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

கோலிவுட்டில், பாலிவுட்டில் பிரபலமான ஒளிப்பதிவாளர் நட்ராஜ் சுப்ரமணியம். சமீபத்தில் வெளிவந்த தனுஷின் அம்பிகாபதி (ராஞ்சனா) படத்திற்கும் அவர்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். நாளை என்கிற படத்தில் நட்டி என்கிற பாத்திரத்தில் நடித்த நட்ராஜ், அதனைத் தொடர்ந்து மிளகா படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

தொடர்ந்து குலசேகரனும் கூலிப்படையும், ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் நட்ராஜ், தனது நட்ராஜ் சினி ஆர்ட்ஸ் சார்பாக தாம் கதாநாயகனாக நடிக்க நெத்திலி மற்றும் புறம்போக்கு ஆகிய டைட்டில்களைப் பதிவு செய்து வைத்திருந்தார். தயாரிப்பாளர் சங்கத்திலும், கில்டிலும் அவர் பதிவு செய்திருக்கும் அந்த தலைப்புகள் இன்னும் அவர் பெயரில் தான் இருக்கின்றன.  புதுப்பிப்பதற்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், UTV ஆர்யா, விஜய் சேதுபதியை வைத்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கப்போகும் அடுத்த படத்தின் பெயர் புறம்போக்கு என்ற தலைப்பை அறிவித்திருக்கிறது.

புறம்போக்கு என்னுடைய தலைப்பாக முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதால் மதிப்பிற்குரிய இயக்குனர் ஜனநாதன் அவர்கள் வேறு தலைப்பை தேர்வு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். நட்ராஜ் சுப்ரமணியம் இந்த தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.