“தலைவா” ஓரிரு தினங்களில் வெளியாகும் – விஜய்!

vijay

விஜய்யின் தலைவா படம் ரம்ஜான் அன்று அதாவது கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் ரிலீஸ் திடீர் என்று நிறுத்தப்பட்டது. படம் வெளியாகி ஒரு வாரம் முடியும் வேளையில், தற்போது விஜய் பேசிய ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் அவர் கூறும்போது, “நான் நடித்த தலைவா திரைப்படம் 9.8.2013 ரம்ஜான் அன்று திரைக்கு வருவதற்காக திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த தேதியில் படம் வெளியாகவில்லை.

படம் தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள், நாடுகளில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் திருட்டு சிடிக்கள் தமிழகத்தில் சேலம், சென்னை, கோவை போன்ற இடங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை கண்டுபிடித்து தடுத்த எனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தை முதல் மாநிலமாக ஆக்க பெரும்பாடுபட்டு வருகிறார். அவர்களை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். அவர்களை விரைவில் சிந்திப்போம், அவர் தலைவா பட பிரச்சினையில் தலையிட்டு எங்களுக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

என் திரைஇபடங்கல் சூப்பர் ஹிட் ஆகும் என்று நான் என்றைக்கும் சொன்னதில்லை. ஆனால் தலைவா படம் உங்களை திருப்திபடுத்தும் என்று நான் நம்புகிறேன்.  பிரச்சினைகள் தீர்ந்து தலைவா திரைப்படம் ஓரிரு தினங்களில் வெளியாகும், உங்களை போலவே நானும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறேன். அதுவரை பொறுமையோடும் கண்ணியத்துடனும் இருக்க வேண்டும் என்று ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.