பேச்சிலராக வரும் பிரபல இசையமைப்பாளர்

ஜீ வி பிரகாஷ் நாயகனாக நடிக்க, இயக்குநர் சசி அவர்களின் உதவியாளராக இருந்து இயக்குநராக இப்படம் மூலம் அறிமுகமாகிறார் சதீஷ் செல்வகுமார். ‘Axess Film Factory’ நிறுவனத் தயாரிப்பாளர் G. டில்லிபாபு இப்படத்தை தயாரிக்கிறார். அடுத்ததாக ஒரே நேரத்தில் சில முக்கிய படங்களை தயாரித்து வருகிறது இந்நிறுவனம். ஒவ்வொரு படமும் தயாரிப்பு நிலையின் வெவ்வேறு கட்டங்களில் இருந்து வருகிறது. அப்படங்களில் முக்கியமானதொரு படைப்பு தான் “பேச்சிலர்”.

ஜீ வி பிரகாஷ் ஜோடியாக திவ்ய பாரதி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் பாகவதி பெருமாள், YouTube நக்கலைட்ஸ் புகழ் அருண் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுதும் முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல இசை நிறுவனமான ‘Think Music’ நிறுவனம் பெற்றிருப்பதில் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.

Axess Film Factory நிறுவன தயாரிப்பாளர் G. டில்லிபாபு கூறுகையில்,

“இது “பேச்சிலர்” படத்தின் மொத்த படக்குழுவிற்குமே மிகவும் உற்சாகமான தருணம். ஜீ வி பிரகாஷின் மாயாஜால இசை ஏற்கனவே கணக்கற்ற வகையில் ரசிக இதயங்களை கொள்ளையடித்துள்ளது. எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இது வெகு முக்கியமான, அற்புதமானதொரு ஆல்பம். தற்போது இசை உலகில் கோலோச்சும் ‘Think Music’ நிறுவனம் இசை உரிமையை பெற்றிருப்பதால் “பேச்சிலர்” உலகம் முழுதும் உள்ள அனைத்து இசை ரசிகர்களையும் சென்றடையும் என்பது உறுதி. விரைவில் பாடல்கள் வெளியீடு பற்றிய அறிவிப்பை, டிரெய்லர் மற்றும் படத்தின் உலகளாவிய ரிலீஸ் தேதியுடன் அறிவிக்க உள்ளோம்” என்று கூறினார்.

Leave a Response