என்னை கொல்லாதே அம்மா!

ஒரு காதலிச்சு கல்யாணம் செய்வதற்குள் கர்ப்பம் ஆகிவிடுகிறாள் அந்த பெண். கல்யாணம் செய்ய முயன்றும் தடைகள் ஏற்படுகிறது. அதற்குள் கருவில் இருந்த சிசுவும் வளர்ந்து விடுகிறது. இருப்பினும் கருக்கலைப்பு செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் மருத்துவர்கள் அந்த கருவை கலைக்க மறுத்துவிடுகின்றனர்.

திடீரென வயிற்றிலிருந்த குழந்தை தாயின் கண் முன்னே தோன்றி, ‘என்னை கொல்லாதே அம்மா’ என்று சொல்வது போல் அந்த பெண்ணுக்கு தோன்ற மனம் மாறுகிறாள் அந்த கர்பமாக இருக்கும் பெண். இவ்வாறான மனதை தொடும் கதை 20 நிமிட குறும் படமாக உருவாகியுள்ளது. அந்த குறும்படம் ‘பாசிட்டிவ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கதையின் பாத்திரங்களாக ஸ்ரீ, ராஜா, பானு ஆகியோர் நடித்துள்ளனர். தாய்லாந்தில் 300 குறும்படங்கள் திரையிடப்பட்டன. அதில் இந்த ‘பாசிட்டிவ்’ சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்ட்டு
1. Foriegn Language Award
2. Audience Online Award
3. Audience Stadium Award ஆகிய மூன்று விருதுகளை பெற்றுள்ளது.

தாய்லாந்தில் இது போன்ற அவலநிலை நிலவி வருவது அறிந்ததே. இந்த குறும்படத்தை பார்த்து திருந்தினார்களானால் இதுவும் விருது தான் என்கிறார் இந்த குறும்படத்தின் இயக்குனர் அமின்.

அமீன் இதுவரை 50 குறும்படங்களை இயக்கி உள்ளார். தற்போது ‘அனுபவம் புதுமை’ என்னும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் அமீன்.

இந்த குறும்படத்திற்கு ஜெயம் கொண்டான் ஒளிப்பதிவு செய்ய, கஜா தானு இசையமைத்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி அமின் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Leave a Response