அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்..!

தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்தியாவின் பெருமைமிகு முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான காயிதே மில்லத்தின் 124வது பிறந்த தினத்தையொட்டி, திருவல்லிக்கேணியில் உள்ள காயிதேமில்லத்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை கொண்டு வர வேண்டும் என்று குரல் கொடுத்தவர் காயிதே மில்லத்.

மும்மொழி திட்டம் என்ற பெயரில் இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது, பின்னர் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது. அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும். அதற்காக தொடர்ந்து திமுக குரல் கொடுக்கும் என நான் உறுதியாக கூறுகிறேன் என்று அவர் கூறினார்.

Leave a Response