கொலையுதிர் காலம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். ஹீரோயினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். ஃபர்ஸ்ட் லுக்கே மாஸாக இருந்தது. இந்நிலையில் இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
நயன்தாரா மூன்று வித முகபாவனைகள் கொடுத்திருப்பது போன்ற செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரை பார்த்தாலே படத்தை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. செகண்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் #KolaiyuthirKaalam என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது.