சபரிமலை குறித்த தீர்ப்பு பக்தர்ளுக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் அளிக்கிறது – பொன் ராதாகிருஷ்ணன்..!

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பு அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிப்பதாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. இது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும்.

ஆண், பெண் இருவரும் சமம் என்பதால் கோயிலுக்குள் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை நேற்று அளித்துள்ளது. இதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில் சபரிமலை குறித்த தீர்ப்பு பக்தர்ளுக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் அளிக்கிறது. வழிபாட்டு தலங்களில் பாரம்பரிய நடைமுறைகளை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும்.

யாருக்கு பின்னாடியும் பாஜக இல்லை, மற்ற கட்சிகளுக்கு முன்னோடியாக உள்ளது. தமிழக அரசியலில் பாஜக மையப்புள்ளியாக விளங்குகிறது என்றார் பொன் ராதாகிருஷ்ணன்.

Leave a Response