ஃபாரின் சாங் சூட்டிங்கே அதற்க்காகத்தான் : போட்டுத் தாக்கும் ஸ்ரீரெட்டி..!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார் அளித்துவரும் நடிகை ஸ்ரீரெட்டி, நடிகைகளை அவர்கள் எவ்வாறு படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்பதை விளக்கியுள்ளார். ஆந்திராவில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த நடிகை ஸ்ரீரெட்டி, வாடிக்கையாளர் ஒருவரின் பரிந்துரையின் பேரில், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அவதாரம் எடுத்தார். பின்னர், திரைப்பட நடிகர்களை பேட்டியெடுக்கத் தொடங்கினார். அதன்பிறகு திரைப்படத் துறையில் சிலரும் பழக்கம் ஏற்பட்டு, திரைப்பட நடிகையாக ஸ்ரீரெட்டி அரிதாரம் பூசினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தெலுங்கு திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு வாய்ப்பு தர, படுக்கைக்கு அழைப்பதாக குற்றஞ்சாட்டினார். அதன்பிறகு அவரது பார்வை தமிழ்த்திரைத்துறை பக்கமும் திரும்பி, இங்கும் சில நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது புகார் அளித்தார். இந்த நிலையில், திரைத்துறையினர் நடிகைகளை எவ்வாறு படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை நடிகை ஸ்ரீரெட்டி விளக்கியுள்ளார். நடிகைகளை படுக்கைக்கு அழைக்க முடிவு செய்யும் இயக்குநர்களோ அல்லது நடிகர்களோ, படத்தின் தயாரிப்பாளர், கதை எழுதுவோர், நடிகர், நடிகைகளை பிடித்து தரும் ஏஜெண்டுகள் அல்லது மேனேஜர்கள் மூலம் வலைவிரிப்பதாக கூறியுள்ளார்.

உனக்கு நல்ல வாய்ப்பை வழங்கி, திரைப்படத்துறையில் உன்னை பெரிய ஆளாக்குகிறேன், ஆனால் நீங்கள் வாய்ப்பு கொடுக்கும் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்பார்கள். இது தான், நடிகைகளை திரைப்படத்துறையினர் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தொழில்நுட்பம் என விளக்குகிறார் ஸ்ரீரெட்டி.

ஒரு சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைகளை அழைத்துக் கொண்டு, காரில் நீண்டதூரம் பயணம் மேற்கொண்டு, பின்னர் காரையே படுக்கை அறையாக மாற்றி நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பார்கள் என்றும், தேவையில்லாமல் ஓட்டல்களில் ரூம் எடுத்து, பிரச்சனையில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க சிலர் செய்யும் சாதுர்யம் என்றும், ஒரு பாடலுக்கேனும் சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி குண்டைத் தூக்கிப் போடுகிறார்.

தமிழ்த்திரைப்படத்துறையினர் பலர், நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க ஹைதராபாத்தையே தேர்வு செய்வதாகவும் கூறியுள்ள ஸ்ரீரெட்டி, தமிழகத்தில் இருக்கும் நற்பெயரை காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள், மாநிலங்களைக் கடந்து உல்லாசம் அனுபவிக்கின்றனர் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி விவரித்துள்ளார்.

Leave a Response