விஜய் மறுத்து, ஜெயம் ரவி ரசித்த கதை!

vijay ravi

துப்பாக்கி படத்திற்கு முன்பே, கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடிப்பதாக இருந்த படம் பகலவன். இது நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இயக்க இருந்த படம். விஜய் திடீரென அந்த படத்தில் நடிக்காமல் விலக, அதன் பிறகு சீமான் இந்தப் படம் குறித்து யாரிடமும் பேசுவதைத் தவிர்த்து, கட்சிப் பணிகளில் மும்முரமானார்.

ஜீவா நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு முறை சீமான் கூற, ஜீவாவும் கதையைக் கேட்டார். நல்லா இருக்கு, ஆனால் பின்னர் நடிப்பதாகச் சொல்லிவிட்டார். படத்தின் கதையைக் கேள்விப்பட்ட ஜெயம் ரவி, இந்தக் கதையில் நான் நடிக்கிறேன். முழுக் கதையையும் கூறுங்கள் என்று சீமானிடம் கேட்டிருக்கிறார்.

3 மணிநேரம் கதையைக் கேட்ட ஜெயம் ரவி, நிச்சயம் நானே நடிக்கிறேன். இப்போது நடித்துக் கொண்டிருக்கும் 2 படங்கள் முடிந்ததும் அடுத்து ஷூட்டிங்கை ஆரம்பித்துவிடலாம் என்றாராம். கலைப்புலி தாணு தான் தயாரிப்பாளர். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

பூலோகமும், நிமிர்ந்து நில்லும் கிட்டத்தட்ட படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்த படங்களைத் தொடர்ந்து சீமான் இயக்கத்தில் நடித்துவிட்டு தான் அண்ணன் ராஜா இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனப்படத்தை நடிக்கப் போகிறாராம்.