கால் நூற்றாண்டு பிரிவுக்கு ‘பாதி’ விடைகொடுத்த ராஜா!

ilayaraja and vairamuthu

‘நிழல்கள்’ படத்தில் இடம் பெற்ற ‘இது ஒரு பொன்மாலை பொழுது’ பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார் வைரமுத்து. இசை இளையராஜா. தொடர்ந்து இந்த கூட்டணி பல வெற்றிபாடல்களை கொடுத்து வந்தது. இடையில் திடீரென என்ன காரணத்தினாலோ இந்த கூட்டணி பிரிந்தது.

இந்த இருவரும் மீண்டும் சேர மாட்டார்களா என பல கோடி இசை ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள் ஏங்கினர். ஆனால் இந்த ஏக்கம் கால் நூற்றாண்டுகளாக தொடர்ந்தது.

பல நூறு தேன் சுவைப் பாடல்களைத் தந்த இந்த இசைக்கூட்டணியின் பிரிவு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டைக் கடந்து விட்ட நிலையில், ரசிகர்களின் ஏக்கம் பாதி தீர்ந்து விட்டது.

வைரமுத்துவோடு இளையராஜா நேரடியாக இணையாவிட்டாலும், வைரமுத்து மகனும் இன்றைய முன்னணி பாடலாசிரியர்களுள் ஒருவருமான மதன் கார்க்கியுடன் இணைகிறார். மிஷ்கின் இயக்கும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் இளையராஜா இசையில் பாடல்கள் எழுதும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் மதன் கார்க்கி.

ஏற்கெனவே யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதும் வாய்ப்பையும் மதன் கார்க்கி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.