இந்நிலையில் சர்க்கார் பட போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில் புகைபிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்திய நடிகர் விஜய், இயக்குநர் ஏர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து தலா 10 கோடி ரூபாய் இழப்பீடு பெற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது. மேலும் அந்த பணத்தை வசூலித்து அடையாறு புற்றுநோய் மையத்திடம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது புகைப்பிடிக்கும் காட்சி தொடர்பாக நடிகர் விஜய், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.