லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் : மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு..!

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் நடந்த லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே சொல்கிறது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.24, டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54 என விற்கப்படுகிறது.

இதற்கு எதிராக யாரும் இன்னும் போராட்டம் செய்ய நிலையில் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவது லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் செய்ய தொடங்கியது.நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்தனர்.

டீசல் விலை உயர்வை கண்டித்து, காலவரையற்ற வேலைநிறுத்தம் என்றனர். இதனால் நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடவில்லை.தமிழகத்தில் 5 லட்சம் லாரி உரிமையாளர்கள் வேலை வேலைநிறுத்தம் செய்யப்பட்டது. மருந்து, பால் மற்றும் தண்ணீர் லாரிகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி 27ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Leave a Response