ரெண்டு ஹீரோயின வச்சு படம் எடுக்க படாத பாடுபட்டேன் – இயக்குனர் ஹரி!

IMG_0334

சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹரி மற்றும் சூர்யா இணைந்துள்ள படம் சிங்கம் 2. இது சிங்கம் படத்தின் இரண்டாவது பாகம். சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, விவேக், சந்தானம் நடித்துள்ள சிங்கம் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. முன்னதாக படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து படத்தை பற்றி பேசினர்.

இயக்குனர் ஹரி பேசும்போது, “சிங்கம் படம் வெளியாகும் முன்பே நானும் சூர்யாவும் ஒரு படம் பண்ண திட்டமிட்டிருந்தோம், படம் வெளியானவுடன் சிங்கம் படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்கும் எண்ணம் உதித்தது. இதற்கான வாய்ப்பும் அமைந்தது, படத்தில் நிறைய விஷயங்களை யோசித்து செய்தோம். மேலும் எனது மற்ற படங்களை போல் அல்லாமல் இந்த படத்தின் காட்சிகளுக்காக வெளிநாட்டிற்கு சென்றோம். பாடல் கட்சிகளை இந்தியாவிலேயே படமாக்கினோம். அதனாலேயே அதிக நாட்கள் எடுத்து கொள்ளவேண்டியதாகி விட்டது.மேலும் பட்ஜெட்டும் அதிகமாகி விட்டது.

சூர்யாவின் அர்ப்பணிப்பு இந்த படத்தில் பல மடங்கு இருந்தது. படம் முடிந்து 10 நாட்களில் உடல் எடையை குறைத்து கௌதம் படத்திற்கு தயாராகி விட்டார்.

நிருபர் ஒருவர் சூர்யா,விக்ரம் ஆகிய இருவரையும் வைத்து போலீஸ் கதை செய்யும் எண்ணம் உண்டா? என்று கேட்டார். அதற்கு ஹரி, இப்போது தான் இரண்டு ஹீரோயின்களை வைத்து படத்தை எடுத்திருக்கிறேன். அதற்கே படாத பாடு பட்டுவிட்டேன், என்றார்.