அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்-காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர்..!

அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ ரஜினியால் ஆட்சியை பிடிக்க முடியாது வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என தெரிவித்தார்.

இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் ரஜினி தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என்று அமைச்சர் சொல்லியிருப்பது புண்படுத்துகிற பேச்சாகும் என்றும் அவர்கள் கூறினர்.

அமைச்சர் தனது பேச்சை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Response