சுத்தி பாக்கணும் சும்மா…. இந்த காட்டுக்கு போயிட்டு வாங்கலேன்!

தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள பாதுகாக்கப்பட்ட இடம் மற்றும் புலிகள் காப்பகமாக இருப்பது சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம்.

தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள பாதுகாக்கப்பட்ட இடம் மற்றும் புலிகள் கா ப்பகமாக இருப்பது சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி அப்போது இருந்த தமிழ்நாடு ஆளுநரால், 1972ம் ஆண்டு காட்டு வாழ்க்கை பாதுகாப்புச் சட்டத்தின் படி சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 2008ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சரணாலயம், 2011ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.

அதிக பரப்பளவு கொண்ட இந்த சரணாலயம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமாகும். புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 2013ம் ஆண்டு தொடங்கப்பட்ட 4வது புலிகள் பாதுகாப்பகமாகும். இந்த சரணாலயத்தைச் சுற்றிலும், கொல்லேகால் வனக்கோட்டம், பிலகிரி ரங்கசாமி கோயில் காட்டுயிர் சரணாலயம், ஈரோடு வனக்கோட்டக் காட்டுயிர் பகுதிகள் உள்ளன.

சத்தியமங்கலம் காடு 5 வகைகளைக் கொண்டதாக உள்ளது. அதில், வெப்ப மண்டல பசுமையான, அரை பசுமையான, கலப்பு – இலையுதிர், முள் காடுகள் மற்றும் உலர்ந்த இலையுதிர் காடுகள் என்று 5 வெப்பமண்டல வனப்பகுதியாக உள்ளது.

தாளவாடி மலை இந்த மாவட்டத்தில் மலைப்பிரதேசமாக உள்ளது. இங்கு, யானை, கரடி, சிறுத்தை, வங்காள புலி, கருங்குரங்கு, மான், காட்டுப்பன்றி, ஆற்று நீர் நாய், செம்புல்லிப் பூனை, கடமான், கள்ள மான், காட்டெருமை, செந்நாய் உள்பட 35 வகை பாலூட்டிகளும், 40க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவித்துள்ளன. மேலும், மீன்பிடி கழுகு, மஞ்சள் திருடிக் கழுகு போன்ற 100க்கும் மேற்பட்ட பறவை வகைகளும், மலைப்பாம்பு, முதலை போன்ற ஊர்வன வகை இனங்களும் இங்கு காணப்படுகின்றன.

சந்தன மரம் அதிகம் காணப்பட்ட இந்த காட்டில் தான் சந்தனக் கடத்தில் வீரப்பன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response