ஒரே நேரத்தில் இரு தேர்தல் நடத்த ஜூலையில் முடிவு !

மாநில சட்டசபை தேர்தல்களுடன் சேர்த்து, பார்லி., தேர்தலையும் நடத்துவது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தேர்தல் கமிஷனும், மத்திய சட்டத்துறை அமைச்சகமும் மே 16 ம் தேதி ஆலோசிக்க உள்ளன.இந்த ஆலோசனை தொடர்பான அறிக்கையை, சட்ட குழு ஜூலை மாதம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

இந்த அறிக்கை தொடர்பான ஆய்வு மற்றும் ஆலோசனைக்கு பிறகு, ஒரே சமயத்தில் மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தலை நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்பட உள்ளது.

Leave a Response