தேசிய திரைப்பட விருது விழா:விருது விழாவை புறக்கணித்த கலைஞர்களுக்கான இருக்கைகள் நீக்கம்..!

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடமிருந்து விருதுகளை வாங்க மறுத்து விழாவை புறக்கணித்த திரைக்கலைஞர்களுக்கான இருக்கைகள் நீக்கப்பட்டது என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.விழா உரிய நேரத்தில் தொடங்கும் எனத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி 65-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டது.

இதில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது டூலெட் படத்திற்கு அறிவிக்கப்பட்டது . இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்தை செழியன் இயக்கியுள்ளார்.

இதற்கு முன் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணிப்பதாக 60 க்கும் மேற்பட்டோர் அறிவித்துள்ளனர்.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிலருக்கு மட்டுமே விருது வழங்குவார் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.விருதுக்கு தேர்வான தமிழகத்தை சேர்ந்த செழியன் உள்ளிட்டோர் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

Leave a Response