முன்னாள் குடியரசுத்தலைவர் A.P.J. அப்துல்கலாம் நினைவிடத்தை திறந்து வைக்கும் மோடி!…

kalam-pti-L
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நினைவிடம் ராமேஸ்வரத்தில் அமைக்கப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் பேய்க்கரும்பு என்னும் இடத்தில் இந்த நினைவிடம் கட்டப்படுகிறது. இதற்காக ரூ.50 கோடி செலவிடப்படுகிறது.

இந்த நினைவிடத்தில் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று அருங்காட்சியகம், அறிவுசார் மையம், நூலகம், கலையரங்கம், உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

கலாம் நினைவு நாளான ஜூலை 27ஆம் தேதி இந்த நினைவிடம் திறக்கப்பட இருக்கிறது. நினைவிடத்தைத் திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக வருகைதர இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அன்றைய தினமே ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரையான புதிய சாலையை திறந்துவைப்பது மற்றும் தனுஷ்கோடி நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்ய மத்திய அரசு முயற்சி எடுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Response