காவிரியில் இருந்து தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரவை மீறினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்றும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

மேலும், வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்யாததற்கு, கர்நாடக தேர்தலை காரணம் காட்டினால் அதையெல்லாம் நாங்கள் ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு கண்டிப்புடன் கூறிய உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியுமா? முடியாதா? என்று நீதிபதிகள் கோபமாகக் கேள்வி எழுப்பினர்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்றும் கர்நாடக அரசுக்கு கண்டிப்புடன் கூறியுள்ளது.

Leave a Response