எங்கள் நாடு என்ன குப்பைத்தொட்டியா? -சதீஷ் ஆவேசம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும், அரசியல்கட்சி தலைவர்களும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.இந்த நிலையில், வருகிற ஏப்ரல் 8-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.இந்த நேரத்தில் காமெடியன் சதீஷ் தனது டுவிட்டரில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், லண்டனில் இருக்கும் ஒரு தொழிலதிபர், ஆஸ்திரேலியாவில் இருந்து தாது பொருளை தூத்துக்குடிக்கு கொண்டு வந்து, அதை சுத்தமாக மாத்தி, கவர்மெண்டுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டு போறான். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இருக்கும் பிரச்சினை அல்ல, இந்தியாவுக்கே அவமானம். எங்கள் நாடு என்ன குப்பைத்தொட்டியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சதீஷ்.

Leave a Response